திருச்சியிலிருந்து தஞ்சைக்கு தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதேபோல் தஞ்சையிலிருந்து திருமலைசமுத்திரத்தை சேர்ந்த பிரவீன் (21) என்பவர் தனத ஊருக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.
தனியார் பஸ் வல்லத்திற்கு செல்வதற்காக பை-பாஸிலிருந்து திரும்பியது.அப்போது எதிரில் ஸ்கூட்டியில் வந்த பிரவீன் மீது பஸ் மோதியது. இதில் பிரவீன் படுகாயமடைந்தார். உடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பஸ்சை சூழ்ந்து முற்றுகையிட்டனர்., மேலும் பஸ் டயரில் இருந்து காற்றை வெளியேற்றி விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த வல்லம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மக்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.