Skip to content
Home » பாபநாசத்தில் கண் சிகிச்சை முகாம்

பாபநாசத்தில் கண் சிகிச்சை முகாம்

  • by Senthil

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பாப நாசம் லயன்ஸ் கிளப்  மற்றும் பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம் தாயார் நாகரெத்தினம் நினைவாக, மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம்,இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடத்தினர்.

முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர்  671  பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். புரை முற்றிய நிலையில் இருந்த 230 பேருக்கு கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற் கொள்ள மதுரை அழைத்துச் செல்லப் பட்டனர். இதில் மலர்க் கொடி, மகாராஜ், விக்னேஷ், வினோதினி, விஜய ஸ்ரீ, பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, மாவட்டத் தலைவர்கள் சம்பந்தம், ஆறுமுகம், செல்வராஜன், சாப் ஜான், முன்னாள் தலைவர்கள் கணேசன், செங்குட்டுவன், பாண்டியன், பிரபாகரன், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!