Skip to content
Home » கள்ளக்காதலை கைவிட சொன்ன மனைவி அடித்து கொலை…

கள்ளக்காதலை கைவிட சொன்ன மனைவி அடித்து கொலை…

 பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் தேவனஹள்ளி தாலுகாவில் ஜெயமஹால் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி. இவரின் மனைவி ஜெயந்தி.   16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது . இந்நிலையில் தான் லட்சுமிபதிக்கும் விஜயப்புரா பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள்.  இது  ஜெயந்திக்கு தெரிய வந்திருக்கிறது.  அவர் உடனே தனது கணவரை கண்டித்து இருக்கிறார்.  இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி ஜெயந்திக்கும் லட்சுமிபதிக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது .

இதனால் வரதட்சணை வாங்கி வா என்று சொல்லி கொடுமைப்படுத்தி இருக்கிறார் .  இதில் ஜெயந்தி மனமடைந்து இருந்திருக்கிறார்.  சம்பவத்தன்று  கணவரின் கள்ள உறவை மீண்டும் ஜெயந்தி தட்டி கேட்டிருக்கிறார்.  அப்போதும் இருவருக்கும் இடையே கடுவாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது . இதில் ஆத்திரம் அடைந்து தனது மனைவியை அடித்து கொலை செய்திருக்கிறார் லட்சுமிபதி.

மனைவியின் உடலை மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார்.  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.   ஜெயந்தி மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்ததில்,  தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தவர்.   அதில் ஏற்பட்ட ஆத்திரத்தை அடித்து கொலை செய்தாரோ என்று தெரிய வந்திருக்கிறது இதை எடுத்து கைது செய்த போலீசார் மேற்கொண்ட வருடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!