Skip to content
Home » 3ம் ஆண்டு துவக்கம்… பட்டாசு வெடித்து கொண்டாடிய மாநகராட்சி திமுக கவுன்சிலர்

3ம் ஆண்டு துவக்கம்… பட்டாசு வெடித்து கொண்டாடிய மாநகராட்சி திமுக கவுன்சிலர்

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் 36வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் வசுமதி பிரபு பட்டாசு வெடித்து, ஐந்து கிலோ அளவிலான கேக் வெட்டி வார்டு பெண்கள், முதியவர்களுக்கு

இனிப்பு ஊட்டி, வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இனிப்பு வழங்கி பகுதி பொதுமக்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!