Skip to content
Home » தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

செங்கல்பட்டு ரயில் நிலையம்  அருகே இன்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது.  சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழியாக செல்லும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 9 பெட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!