Skip to content
Home » திருச்சி அருகே பெல் ஊழியர்கள் ஆர்பாட்டம்… பரபரப்பு..

திருச்சி அருகே பெல் ஊழியர்கள் ஆர்பாட்டம்… பரபரப்பு..

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பெல் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ சேவை வழங்கி வருகிறது.

அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து 33 நாட்களாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெல் வளாகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 16 ஒப்பந்த தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட போது அங்கு பணியில் இருந்த காவலர்கள், கஞ்சி காய்ச்சிய பாத்திரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருச்சி மாவட்ட பொதுநல அமைப்புகள் சார்பாக பெல் ட்ரெய்னிங் சென்டர் முன்பு உள்ள இணைந்த கரங்கள் சின்னத்தை கருப்புத் துணியால் போர்த்தும் போராட்டம் அறிவித்தனர்.

பின்னர்
போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு திருச்சி மாவட்டம் பொதுநல அமைப்புகள் பெல் நிர்வாகத்தை கண்டித்து சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், அமைப்புசாரா தொழிலாளர் இயக்கம் ஷைனி, மக்கள் கலை இலக்கிய மாவட்ட செயலாளர் ஜீவா, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.மேலும்
அங்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு போராட்டம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!