Skip to content
Home » துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமதுசலீம். இவரது மகள் தபசு பாத்திமா ( 15), இவர்களது உறவினர் கோட்டூரை சேர்ந்த அப்துல்ரசாக் இவரது மகள் சுமையா பாத்திமா (17). இவர்கள் குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம், வஜ்ர கருவு பகுதியில் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இன்று காலை சென்னை நோக்கி காரில் வந்தனர். அதில் 6 பேர் இருந்தனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த டிரைவர் விஜய் (32) என்பவர் காரை ஓட்டி வந்தார். இந்த நிலையில், இன்று காலை ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அருகே கார் வந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக , டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த சிறுமிகள் தபசு பாத்திமா, சுமையா பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்ற 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவ இடத்திற்கு சிப்காட் போலீசார் சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!