Skip to content
Home » டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 11 இடங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு தாலுகாவிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகாவிலும் இந்த நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த செய்தி வெளியானதால் டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலக்கரி சுரங்கம் அமைக்க இருப்பதை கண்டித்து இன்று மாலை போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைவதை  தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!