Skip to content
Home » குரூப் 1 ரிசல்ட்….. இன்று வெளியீடு

குரூப் 1 ரிசல்ட்….. இன்று வெளியீடு

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 66 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வுமுடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன்படி, முதன்மை தேர்வுக்கு 3 ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.அவர்களுக்கான முதன்மை தேர்வு ஆகஸ்ட்  மாதம் 4, 5, 6-ந்தேதிகளில் நடந்தது .இந்த தேர்தவினை 1333 ஆண்களும், 780 பெண்களும் எழுதினர்.

இந்த தேர்வு ரிசல்டை  தேர்வாணையம் இன்று வெளியிட்டது.தேர்வு முடிவுகள் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.137 பேர் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஜூலை 13,14,15ம் தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!