Skip to content
Home » விஜயபாஸ்கர் எங்கே?.. திருச்சி பொதுக்கூட்டத்திற்கும் வரவில்லை..

விஜயபாஸ்கர் எங்கே?.. திருச்சி பொதுக்கூட்டத்திற்கும் வரவில்லை..

  • by Senthil

வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் இன்று திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் விஜயபாஸ்கர் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கரின் இலுப்பூர் மற்றும் சென்னை வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பின்னர் விஜயபாஸ்கர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளராக இருக்கும்அவர் திருச்சி கூட்ட ஏற்பாடுகளை எட்டிகூட பார்க்கவில்லை.  இந்த நிலையில் அதிமுக பிரச்சார துவக்கவிழா பொதுக்கூட்டத்திற்கு அவர் கலந்து கொள்ளாதது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!