Skip to content
Home » கடன் பிரச்னை…தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை..

கடன் பிரச்னை…தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை..

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சிவா (32). இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மனைவி ரம்யா, 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக பெரம்பலூர்- துறையூர் சாலையிலுள்ள கல்யாண் நகரில் குடும்பத்துடன் தங்கி, பெரம்பலூர்- ஆலம்பாடி சாலையிலுள்ள அன்பு நகரில் தனியார் ஏஜென்சீஸ் நிறுவனம் நடத்தி, மளிகை கடைகளுக்கு

தேவையான பொருள்களை வழங்கிவந்தார்.

தனது நிறுவனத்தை நடத்துவதற்கு பணம் தேவைப்பட்டதால் சிவா தனக்குத் தெரிந்தவர்களிடம் அதிகளவில் பணம் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். வாங்கிய கடனை முறையாக திரும்ப செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் சிவா இருந்துள்ளார்.

தனது மனைவி ரம்யாவிடம் வெளியேச் சென்று வருவதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற சிவா நீண்ட நேரமாகியும் வரவில்லையாம். இந்நிலையில், அவரிடம் பணிபுரியும் ஊழியர் வாசுகி (19) காலை ஏஜென்சியை திறந்து பார்த்தபோது, உள்ளே சிவா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!