பிதமர் மோடிக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் மஞ்சள் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.
2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி பல்லடம் வந்தடைந்தார்.
பொதுக்கூட்ட மேடையில் பிதமர் மோடிக்கு மஞ்சல் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கலந்து்கொள்வதற்காக வருகை தந்த பிரதமர் மோடிக்கு, 65 கிலோ எடை கொண்ட மஞ்சள் கிழங்கு மாலை அணிவித்து பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்த பிரதமருக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து மாலை அணிவித்தார்.