Skip to content
Home » இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய்…. முதல் விமானம் இன்று டில்லி வருகிறது

இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய்…. முதல் விமானம் இன்று டில்லி வருகிறது

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 5-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பினால் அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முதல் விமானம் இன்று மாலை டெல் அவிவ் நகரில் இருந்து புறப்பட்டு இந்தியா வருகிறது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆபரேஷன் அஜய் திட்டத்துக்கு தேவையான உதவிகளை இஸ்ரேல் செய்யும் என தூதரக அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!