முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பெரம்பலூரில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி
உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விதமான தீ தடுப்பு செயல்முறை விளக்கங்களையும் வெள்ள காலங்களில் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்தும் முதலுதவி பயிற்சியும் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.