தமிழ் மக்களுக்கு பல்வேறு துறைகளில் சேவை செய்து வருவோருக்கு ஆண்டுதோறும் பொங்கல் தினத்தையொட்டி தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது— சுப. வீர பாண்டியனுக்கும், டாக்டர் அம்பேகர் விருது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சண்முகத்துக்கும் வழங்கப்படுகிறது.
இதற்கான பதக்கம், மற்றும் பாராட்டுரையுடன் ரூ.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும் . இந்த விருதுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.