Skip to content
Home » தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே கரம்பத்தூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துச் செல்வம் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் பேரூராட்சித் தலைவர் இலக்கியா, திமுக பேரூர் செயலர் சீனு, மாவட்டப் பிரதிநிதிகள் காஞ்சித் துரை, காத்தையன், வட்ட வழங்கல் அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!