Skip to content
Home » என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

  • by Senthil

மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி டாக்டர் ஒருவரை மிரட்டி லஞ்சம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று விடிய விடிய சோதனையும் நடத்தியது.  இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு…. தன்னையும் அமலாக்கத்துறையின் இடைத் தரகர்கள் மிரட்டியுள்ளதாக கூறியுள்ளார்.  தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழ்நாட்டு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுகின்றனர்.

மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமானவரித்துறை, சிபிஐ, மத்திய அரசு நிறுவனங்கள் மத்திய அரசின் மனநிலை தெரிந்து கொண்டு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களை குறி வைத்து அவர்களுக்கு முதலில் நூல் விடுவார்கள். அப்படியென்றால், உங்களுக்கு இங்கெல்லாம் பிரச்சினைகள் இருக்கிறது, நீங்கள் கவலைப்பட வேண்டாம் நமக்கு ஆள் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவது.. அதன் பின்னர் நமக்கு சாதகமாகவே சில காலம் பேசுவது.. அதைத் தொடர்ந்து வழக்கு தொடரப்போகிறார்கள் என்று மிரட்டுவது, பின்னர் சமாதானம் செய்து வைப்பதாக பணம் பறிக்க முயல்வது.. என தொடர்ச்சியாக பின் தொடர்ந்து பணம் பறிக்க முயல்வார்கள். இது போன்ற சம்பவங்கள் தான் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

என்னிடமும் கடந்த மூன்று மாதங்களாக இடைத்தரகர்கள் பல பேர் பேசி மிரட்டினார்கள். ஒன்றிய அரசு மூலம் உங்களிடம் பிரச்சனை செய்ய சொல்லி இருக்கிறார்கள் என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள். ஊரை விட்டு போகச் சொன்னார்கள். செல்போன் எண்ணை மாற்ற சொன்னார்கள். இப்படி எல்லாம் எனக்கு கடந்த மூன்று மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அப்போ நான் சொன்னேன்.. நான் விவசாயம் மட்டும் தான் பார்க்கிறேன்.. என்னிடமே இப்படி மிரட்டுகிறீர்களே மற்றவர்களை எப்படி மிரட்டுவீர்கள்? நான் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். எனக்கு மேல ஒருத்தர் இருக்கிறார் அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறிவிட்டேன். அவர்கள் யார் என்ன என்றெல்லாம் விசாரிக்கவில்லை. என்னைப் போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் வந்துள்ளது” என்று கூறினார். தமிழக சட்டப் பேரவை சபாநாயகரே மத்திய அரசின் நிறுவனங்கள் பெயரில் தன்னை இடைத்தரகர்கள் மிரட்டினார்கள் என்று கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!