Skip to content
Home » சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு சர்க்கரை ஆலை 1987ஆம் துவங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு 1500டன் கரும்பு பிழியும் திறனை 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக மாற்றப்பட்டது, அந்த வேலையை தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது. ஆனால் 3500 டன் முழு கொள்ளளவு அரைக்க இயலாததால் ஆலை நட்டத்தில் இயங்கியது.
தனியார் நிறுவனத்திற்கு ரூ.4 கோடி பாக்கியை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றம்வரை தனியார் நிர்வாகம் சென்று ரூ.11 கோடி ஆலை நிர்வாகம் வழங்கவேண்டும் என்ற தீர்ப்பை வாங்கியது. இதற்கிடையே கடந்த 2017ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டுவிட்டது.

நீதிமன்ற தீர்ப்பை ஆலை நிர்வாகம் மதிக்காததால் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மூலம் தனியார் நிறுவனத்தினர் நிறைவேற்றுமனு அளித்தனர். இதனால் என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கட்டிடம் மற்றும் நிலங்களை கையகப்படுத்த அதன் மதிப்பை அறிவதற்கு உத்தரவிட்டது, அதன் அடிப்படையில் மயிலாடுதுறை நீதிமன்ற ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என 15க்கும்மேற்பட்டோர் ஆலையின் கட்டிடம் மற்றும் சில பகுதிகளின் மதிப்பீடு பணியை மேற்கொண்டனர். இதைக் கண்ட கரும்பு விவசாயிகள் மாநில செயலாளர் காசிநாதன் தலைமையில் ஒன்றுகூடி இந்த ஆலையை ஜப்தி செய்ய விடாதே, ஆலையை காப்பாற்று, மீண்டும் இந்த ஆலையை இயக்கு என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!