Skip to content
Home » ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும்…

ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும்…

  • by Senthil

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 24-ந் தேதி தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் துவங்கி வைத்தார். முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் நடைபெறுகின்றன. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணிக்காக தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (30-ந் தேதி) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மேலும், பணிநாளுக்கு ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!