Skip to content
Home » திருச்சியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

திருச்சியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் 8213 மாணவர்களுக்கும் 12,186 மாணவிகளுக்கும் என மொத்தமாக 20399 மிதிவண்டிகளை வழங்க இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – இந்நிலையில் இதன் அடிப்படையில் இன்று பொன்மலை பட்டியில் 448 மாணவிகளுக்கு இன்று மிதிவண்டிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் – இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் விழா பேரூரை ஆற்றிய அமைச்சர் மகேஷ்…  தமிழக முதலமைச்சர் மாணவ செல்வங்களிடம் தொடர்ந்து முன்வைக்கக்கூடிய வேண்டுகோள் நன்கு உணவருந்த வேண்டும் நன்கு விளையாட வேண்டும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தாங்கள் கற்பித்து நல்ல மதிப்பெண்கள் பெரும் அதே நேரத்தில் தாங்கள் கற்றுக் கொண்டதை சக மாணவர்களுக்கு சொல்லித் தந்து உதவ வேண்டும். இந்த சமூகத்தில் நடமாடும் நல்ல மனிதர்களை

உருவாக்கக்கூடிய இடம்தான் பள்ளிக்கூடம் – இங்கு படித்து விட்டு செல்பவர்கள் மருத்துவர்களாக, பொறியாளராக – ஏன் கல்வித்துறை அமைச்சராக கூட ஆகலாம். பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்னென்ன வழிகாட்டுதல்களை சொல்லித் தருகிறார்களோ அதனை மாணவச் செல்வங்கள் பின்பற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!