Skip to content
Home » தேர்தலுக்கு முன் அனைத்து கண்காணிப்பு காமிராக்களையும் சரி செய்ய வேண்டும்…. திருச்சி கமிஷனர்

தேர்தலுக்கு முன் அனைத்து கண்காணிப்பு காமிராக்களையும் சரி செய்ய வேண்டும்…. திருச்சி கமிஷனர்

  • by Senthil

திருச்சி மாநகர ஆயுதப்படை திருமணமண்டபத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள், காவல் கூடுதல் துணை ஆணையர்(ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில்,பேசிய கமிஷனர் காமினி…. 
பாராளுமன்ற தேர்தல்2024 பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்து முக்கிய குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும்,
விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் பற்றி ஆய்வு செய்து விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்.

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்து, சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், மேலும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள திருட்டு வழக்குளை துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரிகளை கைது செய்து, வழக்கு சொத்துக்களை மீட்க வேண்டும்.

திருச்சி மாநகரம் முழுவதும் பொருந்தப்பட்டுள்ள CCTV கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் மேலும் பழுதான CCTV கேமராக்களை பழுதுபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் . முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகார்கள், காவல்துறை இயக்குநர் அலுவலக புகார் மனுக்கள் மற்றும் காவல்நிலையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொண்டு, அவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!