Skip to content
Home » பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (28). இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து சம்பாதித்து வந்தார். இந்தநிலையில் இன்று மதியம் 12 மணியளவில் உறையூர் பஞ்சவர்ண சாமி கோவில் மார்கெட் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென 3 மர்ம நபர்கள் அருகில் வந்து சண்முகத்தை தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்ட முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சண்முகம் அலரி அடித்துக்கொண்டு ஓடினார். அவரை விடாமல் 3 மர்ம நபர்கள் விடாமல் துரத்தி சென்றனர்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடினார்கள். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் சண்முகம் நுழைந்தபோது அவரை அங்கு வழிமறித்து 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இச்சம்பவத்தில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்தகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்துஉறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குதிரை ரேஸ் பந்தயம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப் பகலில் வாலிபர் வெற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!