விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து அய்யனார் மற்றும் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அய்யனார் என்பவரது தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த காமாட்சியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு மின்கம்பியை மிதித்த 16வயது சிறுவனும் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
