Skip to content

போலீஸ் பாதுகாப்பு வழங்கியும் கோர்ட்டில் ஆஜராகாத சகாயம்

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாகவும், உரிய அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக கடந்த 2011ம் ஆண்டில் புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் கிரானைட் முறைகேடு மூலம் அரசுக்கு  பல ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு சட்ட ஆணையரும், விசாரணை அதிகாரியுமான சகாயம் தலைமையிலான குழுவினர் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்தனர். இக்குழு அறிக்கை அடிப்படையில் வழக்குகளின் விசாரணை மதுரையிலுள்ள கனிமவள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே கிரானைட் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு கனிமவள நீதிமன்றத்தின் சார்பில் சகாயத்திற்கு பல முறை சம்மன் அனுப்பப் பட்டிருந்த நிலையில், பாதுகாப்பை காரணம் காட்டி நேரில் ஆஜராவதை சகாயம் தவிர்த்து வந்தார். ஆகவே போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இன்று காணொலி மூலம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தனது நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தொடர்ந்து விக்கிரமங்கலம் கனிம வள வழக்கு இன்று மதுரை மாவட்ட கனிம வள நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் சகாயம் ஐஏஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வீடியோ கான்பரன்சஸ் மூலம் ஆஜராவதாக இருந்த நிலையில் மதுரை மாவட்ட கனிம வள நீதிமன்றத்திற்கு சகாயம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், எனவே ஆஜராவதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.

error: Content is protected !!