திருச்சி மாவட்டம் முசிறி கோட்டாட்சியராக இருப்பவர் ஆரமுது தேவசேனா. இவர் இன்று காலை பணி நிமித்தமாக திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு அரசு ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். ஜீயபுரம் அருகே வந்தபோது அவரது ஜீப்பின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஜீப் எதிரே வந்த அரசு பஸ்சில் உரசியது. விபத்தில் இருந்து ஆர்டிஓவை காப்பாற்ற டிரைவர் ஜீப்பை இடதுபுறமாக திருப்பினார். அப்போது அங்கு பணி செய்து கொண்டிருந்த ஜேசிபி எந்திரத்தில் ஜீப் மோதியது. இதில் ஆர்டிஓ தேவசேனா அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். தகவல் அறிந்ததும் கலெக்டர் பிரதீப் குமார் மற்றும்அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். தற்போது தேவசேனா உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தேவசேனா முசிறியில் கடந்த ஒரு வருடமாக கோட்டாட்சியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 50 வயது இருக்கும். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்.