திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணன், திருச்சி கலெக்டராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் திருச்சி மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார்.
அதைத்தொடர்ந்து இன்று மதுபாலன் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பொறுப்பேற்றார்.
திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என புதிய ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆணையைர சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.