Skip to content

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பது இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.கடந்த மாதம் 13ஆம் தேதி நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்து அவர்களை சிறை காவலில் வைத்தனர். இந்த நிலையில், இன்று அவர்களுடைய சிறை காவல் முடிந்து ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனை இன்றி விடுதலை செய்து  உத்தரவிட்டுள்ளது .

error: Content is protected !!