திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 66). இவர் சம்பதவன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

