Skip to content

தேமுதிகவில் நாளை முதல் விருப்பமனு விநியோகம்

தேமுதிக சார்பில் நாளை முதல் பிப் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என பிரேமலதா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவுக்கு ரூ.15,000, தனித் தொகுதிக்கு ரூ.10,000 கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பிப்.12ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!