Skip to content

ரூ.213 கோடியில் மதுரை மேம்பாலம்: “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” எனப் பெயர் சூட்டி முதல்வர் அறிவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்து நெல்பேட்டை அண்ணா சிலை வரை 1.3 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை வரும் 21ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், மதுரையில் 21ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ள மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது திராவிட மாடலில் அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “தேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”!
தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubash ChandraBose அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.
ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!