திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி லட்சுமி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். (46). இவரது மனைவி செல்போனில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்து ராஜேஷ் மனைவியை கண்டித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண் வீட்டிலிருந்து வெளியே சென்றார் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை இது குறித்து ராஜேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.

