கொருக்குப்பேட்டை எழில் நகர் ரயில்வே ட்ராக் பகுதியில் 4 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த மேம்பால பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த மாதம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சுமார் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து கான்கிரீட் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக மாவட்ட செயலாளர் ஆர். எஸ்.ராஜேஷ், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

