புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுக்கா வாண்டா கோட்டை வருவாய் கிராமம் திருவுடையார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி கருப்பையா (70). இவரது மனைவி லெட்சுமி (67). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனராம். கருப்பையா, மனைவி லெட்சுமி இருவரும் தோட்டத்தில் தூக்கில் பிணமாக தொங்கினர். மகனுடன் ஏற்பட்ட சொத்துப் பிரச்சினையில் மனமுடைந்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வாண்டா கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
