ஆட்சியமைக்கவுள்ள சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள் என சமுத்திரகனி தெரிவித்துள்ளார். திருப்பதியில் தரிசனம் செய்த பிறகு பேசிய அவர், இந்த நாளுக்காகவே காத்திருந்தேன் என்றார். சகோதரா.. நிறைய தடைகள் வரும். அதை உடைக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார். முன்னதாக, விஜய்- த்ரிஷா விவகாரத்தில், இதையெல்லாம் நான்கு சுவற்றுக்குள் வைத்து கொள்ளும்படி சமுத்திரகனி விமர்சித்தது கவனிக்கத்தக்கது.
