தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவின்படி நிகழ்ந்துள்ள முக்கிய மாற்றங்கள்:
மகேஷ்குமார் அகர்வால், ஐபிஎஸ்.. புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்கிறார். (இவர் இதற்கு முன்பு சென்னை பெருநகர காவல் ஆணையராகவும், எல்லை பாதுகாப்பு படையில் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றியவர்).
சந்தீப் ராய் ரத்தோர், ஐபிஎஸ்.. சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியிலிருந்து மாற்றப்பட்டு, தற்போது சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கே. சங்கர், ஐபிஎஸ் : சிறைத்துறை டிஜிபி பொறுப்பிலிருந்து குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையராகவும், ஆவடி காவல் ஆணையராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
