தஞ்சையில் நவநீத சேவை வலம் வந்த ராஜவீதியில் வந்த காவல் வாகனம் அச்சு முறிந்து கவிழ்ந்து நின்றது.
அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் மீது மோதாமல் நின்றதால் காயம் இன்றி தப்பினர்
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தஞ்சை மாநகரில் உள்ள 27 வைணவ தலங்களில் இருந்து கிருஷ்ணர் உற்சவராக எழுந்தருளி நவநீத சேவையாக அருள்பாலித்தார்.
கீழ ராஜவீதியில் 27 நவநீத சேவை வரிசையாக நின்றது
ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணரை வழிப்பட்டு கொண்டு இருந்தபோது
அந்த சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்த காவலர்களுக்கு காலை உணவு எடுத்து வந்த காவல் வாகனத்தின் அச்சு முறிந்து ஒரு புறமாக சாய்ந்து நின்றது
காவல் வாகனம் கவிழாமல் சாய்ந்து நின்றதால் அங்கு நின்று இருந்த பக்தர்கள் காயமின்றி அதிர்ஷடவசமாக தப்பினர்
நடு சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
