கேரளம் முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிற்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. வீணாவின் நிறுவனத்தும் CMRL நிறுவனத்துக்கும் இடையிலான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் குறித்து PMLA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 29-ம் தேதி பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
