Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் அதிர்ச்சி-சிறுமியிடம் அத்துமீறல்-இளம் பெண் கைது

Kerala police officials escorting a young female suspect inside a station building in Kasaragod in June 2026 following a minor harassment complaint.

திருவனந்தபுரம் : காசர்கோடு அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கண்ணூர் அருகே உள்ள தளிப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் சினேகா மெர்லின் (25).

கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் காசர்கோடு அருகே உள்ள மேல்பறம்பு என்ற பகுதியில் வசிக்கும் தன்னுடைய தோழியின் வீட்டுக்கு சென்றிருந்தார்.

அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தோழியின் 16 வயது மகளிடம் சினேகா மெர்லின் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று இவர் அந்த சிறுமியை மிரட்டினார்.

இதனால் பயந்த அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பினர் நடத்திய கவுன்சிலிங்கில் சினேகா மெர்லின் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து கூறினார்.

இது குறித்து குழந்தைகள் நல அமைப்பினர் மேல்பறம்பு போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சினேகா மெர்லினை கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!