நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே தனது மனைவியின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அரிவாளால் கொடூரமாக வெட்டிய துணிகரச் சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கணவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பந்தலூரில் குடும்ப தகராறில் மனைவியை கணவர் கத்தியால் வெட்டினார். இதில் மனைவியின் ஒரு கால் துண்டானது. கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கேரளா மாநிலம் கண்னனூர் பகுதியை சேர்ந்த குஞ்சிராமன் மகன் சிஜூ (40). இவர் கர்நாடகா மாநிலம் வீராச்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயமேரியின் மகள் மல்லிகாவை (33) திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மல்லிகா தனது 2 குழந்தைகளுடன் பந்தலூர் அம்பேத்கர் நகரில் உள்ள தனது சித்தி பாக்கியலட்சுமியின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பந்தலூருக்கு வந்த சிஜூ தனது மனைவியை சமாதானம் செய்தார். பின்னர் இருவரும் நேற்று கேரள மாநிலம் மேப்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அங்கும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அவர்கள் பந்தலூருக்கு காரில் வந்துகொண்டிருந்தனர். பந்தலூர் அருகே மேங்கொரேஞ் பகுதியில் வந்து நின்றபோது காரில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை சிஜூ எடுத்து மனைவியின் கண்ணில் தூவினார். தொடர்ந்து, காரில் வைத்திருந்த கத்தியால் மனைவியின் இரு கால்களிலும் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மல்லிகா துடிதுடித்தார்.
இதையடுத்து அவரை பொதுமக்கள் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மல்லிகாவை அனுப்பி வைத்தார். சிஜூ வெட்டியதில் மல்லிகாவின் கால் ஒன்று துண்டானது. இது குறித்து மல்லிகாவின் தாயார் ஜெயமேரி கொடுத்த புகாரின்பேரில் தேவாலா போலீசார் வழக்குப்பதிந்து செய்தனர்.
கேரள மாநிலம் மேப்பாடியில் சிஜூவுக்கும், மல்லிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதே மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட சிஜூ காரில் மிளகாய் பொடி, கத்தி ஆகியவற்றை மறைத்து எடுத்துக் கொண்டு வந்ததும், பந்தலூருக்கு வந்தபோது கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கத்தியால் வெட்டி மனைவியை கொல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிஜூவை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பந்தலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்க்காமல், ஆயுதங்களைக் கையில் எடுக்கும் இத்தகைய வன்முறைப் போக்குகள் சமுதாயச் சீரழிவையே காட்டும். மனைவியைக் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய கணவரைப் பந்தலூர் போலீசார் விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தகுந்த மருத்துவ உதவியும், வருங்காலப் பாதுகாப்பும் அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட வேண்டும்.
📍 பந்தலூர், ஜூன் 13, 2026 — ETamilNews நிருபர்
