திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க இப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.6.55 கோடி மதிப்பீட்டில், தேரோடும் வீதிகளில் உள்ள மின் கம்பிகளை புதை மின்தடங்களாக மாற்றும் பணி தற்போது தொடங்கியுள்ளது. ஒரு மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
