ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்ற வனத்துறை வாகனத்தை, ஒற்றை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்தியுள்ளது. இதனால் வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஓட்டுநர் சமயோசிதமாக வாகனத்தை பின்னோக்கி இயக்கி பத்திரமாக தப்பினார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
