தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராகத் தவெக நிர்வாகி லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், முதல்வர் விஜய்யிடம் இதற்கான நியமன ஆணையை அவர் பெற்றுக் கொண்டார். லயோலா மணி இப்பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்தப் பதவியில் திண்டுக்கல் லியோனி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
