தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை. கண்ணைக் கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம்.
அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்னை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
முக்கியமாக, இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம்.
பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்கக் கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிட வேண்டும்.
நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்-உணவு பாதுகாப்புத் துறை.
