நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் திரையுலகத்தினர் இன்று (ஜூலை 23) மாலை சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் நடிகை ரேவதி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பங்கேற்கும் இப்போராட்டத்தில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த அறப்போராட்டம் நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ளது.
