சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது காவல்துறையின் மோப்ப நாய் ‘ராக்கி’ தனது வாயில் பூங்கொத்தை கொண்டு வந்து முதலமைச்சரிடம் வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கரவொலி எழுப்பி பாராட்டினர்.
