பழனி கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக, பொன்மணி IAS தலைமையிலான புதிய ஆய்வுக்குழுவினர் தேவஸ்தானத்தில் தீவிர ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கோயிலின் வருவாய், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் நேரில் ஆய்வு செய்யப்பட்டன. அனைத்து சொத்துகளும் சரிபார்க்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொன்மணி IAS, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றார்.
