மகாராஷ்டிராவில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் தப்பிய நிலையில், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
