மதுரை: முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறி, செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெண் அதிகாரியிடம் தவெக நிர்வாகி பாண்டியராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக அவர் குற்றம்சாட்டினார். பாண்டியராஜன் பெண் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
