திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.5) சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து புதுக்கோட்டையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, நேருவின் வீட்டை ஆட்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், லஞ்ச ஒழிப்பு துறையினரே சுத்தம் செய்து கொடுத்துவிட்டு போய்விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.மேலும், எத்தனை முறைதான் அவர் வீட்டை சோதனை செய்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
