மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று (செப். 11) “மகாகவி நாள்” ஆக தமிழக அரசால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாரதியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் த.சரத்குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அரசு உயர் அலுவலர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
